Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

முதிரா நிலையில் கழித்தொதுக்கம் செய்யப்பட்ட வாகனம் பொது ஏலம்

திருச்சிராப்பள்ளி மீன்வளம் மற்றம் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக ஈப்பு எண் டி.என்.01.ஜி.1040ஐ முதிரா நிலையில் கழித்தொதுக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஏலத்தின் மூலம் விற்பனை செய்வதற்கான பொது ஏலமானது வருகின்ற 17.10.2022 காலை 10.30 மணிக்கு காயிதே மில்லத்தெரு, காஜாநகர், மன்னார்புரம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஏலம் நடைபெறும்.

ஏலம் எடுக்க விரும்புவோர் (12.10.2022) காலை 10.00 மணி முதல் (14.10.2022) மாலை 5.45 மணி வரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊர்தியினை பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றே ரூ.3500- (ரூபாய் மூவாயிரத்தி ஐநூறு மட்டும்) முன்பணமாக செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் ஏலம் எடுத்தவர்கள் ஊர்திக்கான ஏலத்தொகையுடன் அதற்குண்டான 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியினை (18% GST) சேர்த்து ரொக்கமாக அன்றைய தினத்திலேயே செலுத்திட வேண்டும் என்பதையும் இந்த அறிவிப்பின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *