Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மத்திய அரசின் ‘கோபால் ரத்னா’ விருது பெற விண்ணப்பிக்க அக்-10ந் தேதி கடைசி நாள்-ஆட்சியர் தகவல்

இந்திய அரசு பின்வரும் விருதுக்கான விண்ணப்பங்களை (10.10.2022) பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதியுடன் அழைத்துள்ளது என தெரிவித்துக் கொள்கிறோம். கறவை மாடுகள் உள்நாட்டு இனங்களின் உற்பத்தித்திறனை அறிவியல் என முறையில் மேம்படுத்துவதற்காக விவசாயிகளை ஊக்கப்படுத்துதல் மூலமாக ராஷ்ட்ரிய கோபால் ரத்னா விருதுகள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

கறவை மாடுகளின் உள்நாட்டு இனங்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் வகையில் 50 இனம் மாடுகள். மற்றும் னகை எருமைகள் அங்கீகரிக்கப்பட்ட 17 உள்நாட்டு இனங்களில் எதேனும் ஒன்றை பராமரிக்கும். விவசாயிகள் விருதுக்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள்

மாநில / யூனியன் பிரதேசம் (UT) கால்நடை மேம்பாட்டு வாரியம் / மாநில பால் கூட்டமைப்புகள் / அரசு சாரா அமைப்புகள் (NGO) மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழில் நுட்ப வல்லநர்கள் குறைந்த பட்சம் 90 நாட்களுக்கு செயற்கைமுறைகருவூட்டல் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

ஒரு கூட்டுறவுங்கம் / பால் உற்பத்தியாளர் நிறுவனம் (MPC) / உழவர் உற்பத்தியாளர் அமைப்பு (FPO) கிராம அளவில் பால்பண்ணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு கூட்டுறவு சட்டம் / கம்பெனிகள் சட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம்100 லிட்டர் பால் சேகரித்து, குறைந்தபட்சம் 50 விவசாயி உறுப்பினர் / பால் உற்பத்தியாளர் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

மேற்காணும் தகுதியுடைய விவசாயிகள் மற்றும் 90 நாட்களுக்கு செயற்கை முறை கருவூட்டல் பயிற்சி பெற்று மக்கள் தொடர்பு பணியாளர் (LWC) கீழ்காணும் இணைய தளத்தில்

https://awards.gov.in/Home/Awardpedia?MinistryId=DO23&OngoingAwards=1&ptype=Phttps//awards.gov.in/Home/AwardLibrary

அல்லது அந்தந்த கட்டுப்பாட்டு கால்நடை மருந்தசு, கால்நடை உதவி மருத்துவர்களிடம் (10.10.2022) தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட  ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவிததுள்ளார்

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *