திருச்சி மாநகர காவல் ஆணையராக கார்த்திகேயன், பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், குற்றச் செயல்களில் ஈடுபடும் கெட்ட நடத்தைக்காரர்கள் செல்போன் 
பறிப்பு, செல்போன்திருட்டு மற்றும் செல்போன் கொள்ளையில் ஈடுபடுவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, சரக உதவி 
ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் 
வழங்கப்பட்டது.
அதன்படி, திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொதுமக்களை அச்சுறுத்தி இருசக்கர வாகனத்தில் வந்து செல்போன் பறிப்பு மற்றும் செல்போன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, துரிதமாக செயல்பட்டு, திருச்சி மாநகரத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை 
ஆய்வு செய்து, சந்தேக நபர்களை விசாரணை செய்தும், தீவிர வாகன தணிக்கை செய்து, செல்போன் பறிப்பு வழக்குகளில் தொடர்புடைய 98 குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செல்போன் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 80 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களை அச்சுறுத்தி செல்போன் பறிப்பு சம்பவங்களில் தொடர்ந்து ஈடுப்பட்ட வந்த 14 குற்றவாளிகளை காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
திருச்சி மாநகரத்தில், சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கவும், சட்ட விரோதமாக 
செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்ட நடத்தைக்காரர்கள், செல்போன் பறிப்பு, 
செல்போன் திருட்டு மற்றும் செல்போன் கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளை 
கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தெடர்ந்து 
மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments