Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் – விற்பனை செய்தவர் தப்பி ஓட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி கடைவீதி பகுதியில் உள்ள மதுபான கடை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளர் ந.ராமநாதன் உத்தரவின்பேரில் துவரங்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் செல்லப்பா, தனிப்பிரிவு காவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அப்பகுதியில் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு காமன் கோவில் தெருவை சேர்ந்த அப்துல்சலாம் மகன் அப்துல்வாகித் (20) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. போலீஸாரை பார்த்தவுடன் அப்துல்வாகித் தப்பி ஓடியுள்ளான். பின்னர் அப்துல்வாகித் விலாசம் கேட்டறிந்து வீட்டில் சென்று பார்த்த போது அங்கிருந்த 1 கிலோ 250 கிராம் எடையுள்ள கஞ்சாவையும், கஞ்சா விற்பனை செய்ய பயன்படுத்திய இருசக்கர வானத்தையும் பறிமுதல் செய்த துவரங்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய அப்துல்வாகித்தை தேடி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

 #டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *