Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி டிச.29-ல் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் – பிரச்சார கூட்டம்

அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் மேதகு ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டிசம்பர் 29 ஆளுநர் மாளிகை முற்றுகை -மேற்குப் பகுதி குழு சார்பில் மக்கள் சந்திப்பு தெருமுனை பிரச்சாரக் கூட்டம் திருச்சி மாநகரில் டிச21ல் நடைபெற்றது.

உய்யகொண்டான் திருமலை கீதா நகரில் கொடாப்பு சுமதி தலைமையில் துவங்கிய பிரச்சாரக் கூட்டத்தினை 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் துவக்கி வைத்து உரையாற்றினார். புத்தூர் பகுதியில் 24வதுவார்டு செயலாளர் துரைராஜ் தலைமையில் மாநகர் மாவட்ட செயலாளர்எஸ். சிவா உரையாற்றினார். 23 வது வார்டில் செயலாளர் கே. முருகன் தலைமையில் மேற்குப் பகுதி துணைச் செயலாளர் இப்ராஹிம் உரையாற்றினார். நாச்சியார் கோவில் பகுதியில் 9வது வார்டு செயலாளர் ஆனந்தன் தலைமையிலும் பஞ்சவர்ணசாமி கோவில் பகுதியில் 10வது வார்டு செயலாளர் ரவீந்திரன் தலைமையிலும் இறுதியாக தென்னூர் பஸ்நிறுத்தத்தில் மேற்குப் பகுதி செயலாளர் சுரேஷ் முத்துசாமி தலைமையில் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் எம்.செல்வராஜ் நிறைவுறையாற்றினார். துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்வில் பகுதி குழு உறுப்பினர்கள் புஷ்பம், ஆயிஷா, சத்யா, சரண்சிங், சீனிவாசன், நாகராஜ் ,ராஜேஸ்வரி, ராமமூர்த்தி, உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *