Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தையல்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

திருச்சி மாவட்டம் கோவில்பட்டி அருகே மேட்டுக்காட்டுபட்டியில் வசிப்பவர் முருகேசன் (45). இவர் கோவில்பட்டியில் தையல் கடை வைத்து உள்ளார். இவரது மனைவிதேவி (37). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை முருகேசன் கோவில்பட்டியில் உள்ள தனது கடைக்கு சென்றுள்ளார் தேவியும் அருகில் உள்ள தோட்டத்திற்க்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டிற்கு வந்து முருகேசன் வீட்டின் பூட்டு உடைக்கபட்டிருப்பது தெரியவந்தது. உடனே முருகேசன் வீட்டினுள் சென்று பார்த்த போது உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கபட்டிருப்பது தெரியவந்தது. பீரோவில் இருந்த 9 பவுன் நகை மற்றும், 2.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கபட்டிருப்பது தெரியவந்தது.

முருகேசன் உடனடியாக வளநாடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வளநாடு காவல் துறையினர் மோப்பநாய், மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் கொள்ளையடிக்கபட்ட வீட்டை பார்வையிட்டார். விவரங்களை கேட்டறிந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வளநாடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *