Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் இடி தாக்கியதில் முதியவர் பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி பெரியவெள்ளபட்டியில் வசித்து வந்தவர் பழனியப்பன் மகன் வெங்கடாசலம் (65). இவர் அப்பகுதியில் கால்நடை மேய்ச்சலில் இருந்துள்ளார்.

கோடை வெப்பசலனம் காரணமாக மாலையில் இடி மின்னலுடன் மழை பெய்தது. மழைக்காக அருகிலிருந்த வேப்ப மரத்தடியில் ஒதுங்கிய போது, மரத்தின் அருகில் விழுந்த இடி தாக்கியதில் வெங்கடாசலம் நிகழ்விடத்திலேயே சுருண்டுவிழுந்து உயிரிழந்தார்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற வருவாய்துறை மற்றும் காவல்துறையினர், வெங்கடாசலம் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *