Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

காதலன் மீது தாக்குதல் – காதலி தற்கொலை

திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே உள்ள ஆமுர் கிராமத்தைச் சேர்ந்த மலையாளி என்பவரது மகள் சங்கவி (20). இவர் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் தொட்டியம் பகுதியில் ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு காதலி சங்கவி பார்ப்பதற்காக வந்த காதலனை அப்பகுதி இளைஞர்கள் நீ யார் என்பது குறித்து விசாரித்து அவரை தாக்கிய போது காதலி சங்கவி என்னை பார்க்க தான் வந்துள்ளார் என கூறப்படுகிறது. பின்னர் சங்கவி அன்று இரவே அவரது வீட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து சங்கவி பெற்றோர் மறுநாள் காலையில் வீட்டை திறந்து பார்த்தபோது சங்கவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது .

இதனையடுத்து யாருக்கும் தெரியாமல் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சேர்ந்து சங்கவியின் உடலை அடக்கம் செய்வதற்கு முடிவு செய்தனர். பின்னர் உடலை இடுகாட்டிற்கு தகனம் செய்வதற்கு கொண்டு செல்லும் வழியில் சமூக ஆர்வலர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சங்கவி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *