Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஆசிரியர் ஆபாச வார்த்தையில் திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற திருச்சி மாணவி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வேங்கூரில் உள்ளது செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்சி பள்ளி இந்த பள்ளியில் ஆயிரம் கணக்கான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பள்ளியில் உள்ள விடுதியில் கட்டாயமாக தங்கி படிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பள்ளியில் ஆசிரியர்கள் திட்டியதால் மனம் உடைந்து பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயல்வது பள்ளிக்கு கட்டணம் செலுத்தவில்லை என்றால் மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகம் வெளியில் நிறுத்தி வைப்பது இப்படி பல்வேறு பிரச்சினைகள் நடப்பது வழக்கமாகவும்,

இந்நிலையில் மாணவி பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு வணிகவியல் படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி ஆசிரியர் வினோத் என்பவர் மாணவியை சக மாணவிகளுக்கு முன்பு ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மணமடைந்த மாணவி அறையில் வைத்திருந்த 7 பாராசிட்டமல் மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் பற்றி பள்ளி நிர்வாகத்துக்கு தெரிந்ததும் வெளியில் தெரியாமல் மாணவியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் மாணவியை அவரது பெற்றோர்கள் தனியார் மருத்துவமனையில் மானவியை சேர்த்துள்ளனர் இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *