Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

துலாம் மாதபிறப்பு காவிரியிலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தங்ககுடத்தில் புனிதநீர்

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ரெங்கநாதர் ஆலயத்தில் இன்று முதல் துலாம் மாதம் துவங்கிறது. இதனையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புனித திருக்காவிரியிலிருந்து திருமஞ்சனம் (புனிதநீர்) தங்க குடத்தில் எடுத்து கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் நம்பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

சூரியன் ராசி மண்டலத்தில் துலாம் ராசியில் பிரவேசிப்பது துலாம் மாதம் எனபப்டுகிறது. ஐப்பசி மாதம் சூரியன் பிரவேசிக்கும் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த ஆண்டு துலாம் மாதம் பஞ்சாங்கப்படி இன்று துவங்கியதால் கோவில் யானை ஆண்டாள் மீது தங்ககுடம் மற்றும் வெள்ளி குடங்களில் புனிதநீர் எடுத்துவந்து ஐப்பசி மாதம் முழுவதும் ஸ்ரீரங்கநாதருக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.  

புனிதமான காவிரியில் நீராடினால் பாவங்கள் தீரும் மற்றும் நமக்கும் நமது குடும்பத்தில் நன்மைகள் வந்துசேரும் என்பதால் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் திரண்ட ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடி பின்னர் நம்பெருமாளை வழிபட்டனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *