Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருநெடுங்களநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமைகளில் அனைத்து சிவாலயங்களில் சோமவார சங்காபிஷேகம் நடைபெறுவது. அதன் ஒரு பகுதி திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

 தொடர்ந்து 108 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து திருநெடுங்களநாதருக்கு சங்காபிஷேகமும், பால், சந்தனம், மஞ்சள், அன்னம், விபூதி உள்ளிடட் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *