Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியை சேர்ந்தவர் சவுதி அரேபியாவில் பலி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வாழவந்தான் கோட்டை முல்லை வாசல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (43). இவரது மனைவி ரோஸ்லின் மேரி. இந்த தம்பதியினருக்கு இவாஞ்சலின், ஏஞ்சல் என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் திருச்சியில் கூலி வேலை செய்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு தோட்ட வேலைக்காக சென்றுள்ளார். ஒரு வருட ஒப்பந்தம் முடிந்த பிறகும் மீண்டும் அதை புதுப்பித்து இரண்டாம் ஆண்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த பதினெட்டாம் தேதி இரவு ராஜசேகர் பணி முடிந்து அறைக்கு திரும்பியபோது சாலையை கடக்க முயன்றதில் அவ்வழியே வந்த வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் என்ற தகவல் அங்குள்ள நபர் ஒருவர் மூலம் மனைவி ரோஸ்லின் மேரிக்கு தகவல் வந்தது.

இதனால் மனைவி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். மேலும் ராஜசேகரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர மனைவி மற்றும் குழந்தைகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்து முறையிட்டனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் கோரிக்கை மனு அளித்தனர்.

இறந்து இரண்டு நாட்களுக்கு மேலாகியும் அவரைப் பற்றிய விவரம் தெரியாமல் குடும்பத்தினர் தவிர்த்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசும், துறை சார்ந்த அதிகாரிகளும் துரித நடவடிக்கை மேற்கொண்டு ராஜசேகரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….. https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

ttps://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *