Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

முறை தவறி பிறந்த குழந்தையை கொன்ற நபர் கைது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை உட்கோட்டம், வையம்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மரிய ஜேக்கப் (49). த.பெ.லாசர் என்பவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

முன்னதாக, மேற்படி மரிய ஜேக்கப்-இன் முதலாவது மகள் மரிய வினோதினி என்பவருக்கு பிரான்சிஸ் சேவியர் என்பவருடன் திருமணமாகி, பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து, தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த (30.12.23)-ஆம் தேதி மேற்படி மரிய வினோதினிக்கு வயிற்றுவலி ஏற்படவே, அவரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில், அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. (வேறுஒரு நபருடன் உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இது தெரியவரவே. மேற்படி மரிய ஜேக்கப் தனக்கு அவமானமாகி போய்விடும் என்று எண்ணி, பிறந்த குழந்தையை வேறுயாரிடமாவது கொடுத்துவிடலாம் என எண்ணி, தெரிந்தவர்களிடம் விசாரித்துள்ளார். ஆனால் அது பலனிளிக்காமல் போகவே, மேற்படி முறைதவறி பிறந்த குழந்தையை வளர்த்தால் அவமானம் எனக்கருதி, அதனை கொன்றுவிட முடிவுசெய்து, அக்குழந்தையை ஒரு துணியில் மூச்சுவிட முடியாத அளவிற்கு சுற்றி கட்டைப் பையில் எடுத்துக்கொண்டு பிறந்த குழந்தையென்றும் பாராமல், அதனை செக்கனத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக செக்கனம் கிராம நிர்வாக அலுவலர் ஆண்டாள் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், வையம்பட்டி கா.நி. குற்ற எண்-39/24, ச.பி. 315,318, 302 இதச-இன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் எதிரியான மரிய ஜேக்கப்-ஐ கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… 

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *