Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மணப்பாறை அருகே சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ராம ரெட்டிபட்டி செல்லும் வழிச்சாலையில் இரு தரப்பினருக்கு இடையே பாதை பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அவ்வழியாக செல்லும் வழிச்சாலையில் தாங்கள் பட்டா இடம் உள்ளது எனக் கூறி எஅந்தப் பாதையை மறித்து வேலி போட்ட ஒரு தரப்பினர் இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய மாணவர்கள் விவசாயிகள் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

 பல போராட்டங்களுக்குப் பிறகும் பேச்சு வார்த்தைகளுக்கு பிறகும் நடவடிக்கை இல்லாததால் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பகுதியினர் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடுப்பட்டியில், திடீரென இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வையம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் குடுமிநாதன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *