Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி அருகே இயங்காத ஆலையிலிருந்து புகை நெடி – பதட்டம்

திருச்சி செந்தணீர்புரம் பகுதியில் இயங்கா நிலையில் உள்ள திருச்சி டிஸ்டிலரீஸ் நிறுவனத்தில் முள்புதர்களுக்கு இடையில் வைக்கப்பட்டிருந்த 63 டன் மஞ்சள் நிற திட கந்தகத்தின் ஒரு பகுதி தீ பற்றி எரிந்து நெடியுடன் கூடிய புகை வெளிவந்து கொண்டிருந்தது.

இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தீயணைப்பு வீரர்கள் மூச்சு கருவி அணிந்து கொண்டு தீயை முற்றிலும் அணைத்து பெரும் அசம்பாவிதத்தை தடுத்து விட்டனர்.

எனினும் சில மணி நேரம் பகுதி மக்கள் ஏதும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று பதட்டம் அடைந்தனர். மேலும்  தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நின்று கொண்டிருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *