Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஐ ஜே கே தலைவர் போட்டியிடும் தொகுதி? – திருச்சியில் ஆலோசனை

திருச்சி எஸ் ஆர் எம் ஹோட்டலில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி தலைமையில் வழக்கறிஞர் அணியின் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சியின் வழக்கறிஞர் அணி செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர் எம்பி ….வருகிற 17-ஆம் தேதி திருச்சி சிறுகனூரில் ‘தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம்’ இந்திய ஜனநாயக கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது.  இந்த மாநாடு வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும். 3 லட்சம் பேர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

இக்கூட்டத்தில் தற்கால அரசியல் சூழ்நிலைகள், வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான கட்சியின் நிலைபாடு போன்ற முக்கிய கருத்துக்கள் ஆலோசிக்கபட்டன. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார். பாஜக கூட்டணியில் ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளை ஒதுக்குவதாக உறுதி அளித்துள்ளனர். 

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர்கள் சிலர் பங்கேற்க உள்ளனர் என்றார். பாராளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக இந்திய ஜனநாயக கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநில கூட்டத்தில் திருச்சியில் நடைபெற உள்ள மாநாடு மற்றும் தேர்தல் காலத்தில் தங்களின் செயல்பாடுகள் குறித்து இந்திய ஜனநாயக கட்சிக்கு வலு சேர்க்க வழக்கறிஞர் அணி செயல்படும் விதம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *