Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சிக்கு சுற்றுலா வந்த வாலிபர் தாய் கண் முன்னே மரணம்

திருப்பூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தன் தாய் கங்கேஸ்வரி மற்றும் திருப்பூரை சேர்ந்த ஆறுமுகம் (63), பாப்பாத்தி (58), சாந்தாமணி (56 ) ஆகியோருடன் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை சுற்றுலாத்தலத்திற்கு வந்துள்ளார்.

அப்போது சிவகுமார் எதிர்பாராத விதமாக அங்கிருந்த நீரில் மூழ்கி தவறி விழுந்துள்ளார். உடனே அவரது உறவினர்கள் சிவக்குமார் போராடி மீட்டனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த வந்த சேந்தமங்கலம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாய் முன்னே மகன் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *