Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஆபாசமாக திட்டி, வீடு மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

கடந்த (02.05.2024)-ந் தேதி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீனிவாச நகரைச்சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக திட்டி, அவரது வீடு மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியதாக பெறப்பட்ட தகவலின் பேரில் புத்தூர் கீழ வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த வெங்கி (எ) வெங்கடேசன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் விசாரணையில் ரவுடி வெங்கி (எ) வெங்கடேசன் என்பவர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக 2 வழக்குகள் உட்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவருகிறது.

மேலும் ரவுடி வெங்கி (எ) வெங்கடேசன் என்பவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரசு மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த மாநகர காவல் ஆணையர் ந.காமினி மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்று பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *