Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

12 யூனிட் கிராவல் மண் திருட்டு – 2 பேர் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம். சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னையிலிருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கொணலை NSR Hotel அருகில், கொணலை கிராம நிர்வாக அலுவலர் சோமசுந்தரம் மற்றும் கிராம உதவியாளர் TN-45-BF-2632, TN-48-BF-2682 இரண்டு டிப்பர் லாரிகளில் சுமார் 12 யூனிட் கிராவல் மண்ணை ஏற்றிவந்துள்ளனர்.

மேற்படி வாகனங்களை கிராம நிர்வாக அலுவலர் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டபோது எவ்வித அரசு அனுமதியின்றி கிராவல் மண்ணை திருடி வந்ததாக. மேற்படி இரு டிப்பர் லாரிகளை ஒட்டிவந்த ஓட்டுநர்கள் நெல்சன் ராஜ் (25) S/o ஆரோக்கியசாமி, 1/355, ஏரிக்கரை, இருங்களூர், மண்ணச்சநல்லூர், திருச்சி மற்றும் ஜான் சதீஸ் (30), S/o அருள்தாஸ், 3/891, தெற்கு தெரு, கொணலை. மண்ணச்சநல்லூர். திருச்சி ஆகியோரை சிறுகனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக சிறுகனூர் காவல் ஆய்வாளர் இராமலிங்கம் மேற்படி டிப்பர் லாரிகளின் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது சிறுகனூர் காவல் நிலைய குற்ற எண் 81/24 U/s 379 IPC r/w 21(1) TNMM ActAct. வழக்கு பதிவு செய்து அனுமதியின்றி சுமார் 12 யூனிட் கிராவல் மண்ணை திருடி வந்ததற்காக இரண்டு ஓட்டுநர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளார். 2 லாரிகளும் கிராவல் மண்ணுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக இருந்துவரும் இரு டிப்பர் லாரிகளின் உரிமையாளர்களை பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக புகார் ஏதேனும் தெரிவிக்க வேண்டி இருப்பின் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண் : 9487464651 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *