Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருமண பெண் அழைப்பிற்கு சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து – 30 பேர் காயம்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள நாச்சியாபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் சத்யராஜ் இவருக்கும் துறையூர் அருகே உள்ள சொக்கநாபுரத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் இன்று நடைபெற உள்ளது. இதையடுத்து முருகேசன் தனது உறவினர்களுடன் பெண் அழைப்பு நிகழ்ச்சிக்கு தனியார் பேருந்து ஒன்றில் நாச்சியார் புதூர் கிராமத்திலிருந்து கெம்பியம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பேருந்து துறையூர் அருகே உள்ள கெம்பியம்பட்டி அருகே சென்ற பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலை தடுமாறி‌ சாலையோரம் இருந்த பத்து அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த ஆண் மற்றும் பெண் என 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு துறையூர் தீயணைப்பு துறையினர்  விரைந்து வந்தனர்.

பின்னர் காயமடைந்த நபர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து ஜம்புநாதபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *