தமிழ்நாட்டின் மையப்பகுதியில் உள்ளது திருச்சி மாவட்டம். தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி மாவட்டம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் உள்ளது. திருச்சியை தனிப்போக்குவரத்து கழகமாக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது.

அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்தில் 3 ஆயிரத்து 500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்து வருகின்றனர். இதனால் சில அசம்பாவி சம்பவங்களும் நடைபெற்று உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு அரசு பேருந்து படியில் பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில் தானியங்கி கதவுகள் கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இதனை தொடர்ந்து அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் திருச்சியில் எந்த வழித்தடத்தில் அதிகளவிலான மக்கள் பயணம் செய்கின்றனர் என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. அதிலும் முக்கியமாக பள்ளி கல்லூரி வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்துக்கு 100 தானியங்கி கதவுகள் கொண்ட அரசு பேருந்துகளை இயக்க கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில் முடிவு செயய்ப்பட்டுள்ளது. எம்டிசி சார்பில் சென்னையில் இந்த பேருந்துகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டபடி தானியங்கி கதவுகள் கொண்ட பேருந்துகள் விபத்துகளை தவிர்க்க இயக்கப்பட வேண்டும். கும்பகோணம் கோட்டத்தில் மொத்தம் 3500 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் 1500 பேருந்துகள் மட்டுமே தானியங்கி கதவுகளை கொண்டதாக இருந்து வருகிறது. திருச்சியை பொறுத்தவரை 282 நகரப்பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதில் 33 பேருந்துகள் மட்டுமே தானியங்கி கதவுகளை கொண்ட பேருந்துகளாக இயக்கப்படுகிறது. விரைவில் தானியங்கி கதவுகள் கொண்ட பேருந்துகள் திருச்சியில் இயக்கப்படும். இதற்காக கரூரில் தானியங்கி கதவுகளை கொண்ட பேருந்துகள் அடுத்த 3 மாதத்திற்குள் அமைக்கப்படும்.

விரைவில் திருச்சியில் எந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் முதலில் சமயபுரம், மண்ணச்சநல்லூர், துவாக்குடி போன்ற பகுதிகளுக்கு முதலில் இந்த தானியங்கி கதவுகள் கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கதவுகள் அமைக்கப்படுவதற்கு 5 முதல் 10 ஆண்டுகள் கொண்ட பேருந்துகளில் அமைக்கப்படும். பழைய பேருந்துகள் அனைத்தும் மொத்தமாக மாற்றும் போது தான் கதவுகள் அமைக்கமுடியும்.

100 பேருந்துகள் இயக்கப்படுவதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதேபோல் அவர்கள் அனைவரும் தனியார் பேருந்துகளுக்கு தானியங்கி கதவுகள் பொருத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை தனியார் பேருந்துகளும் 150 பேருந்துகள் வரை இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           126
126                           
 
 
 
 
 
 
 
 

 08 June, 2024
 08 June, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments