Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

குளிக்கச் சென்ற பள்ளி மாணவர் ஏரியில் மூழ்கி பலி

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூர் கீழராஜவீதியைச் சேர்ந்தவர் மாறவர்மன். இவர் சமயபுரம் மாரியம்மன் கோவில் முடி மண்டபத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் நிஷாந்த் (12). இவர் சிறுகனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று நிஷாந்த் தனது நண்பர்களுடன் சிறுகனூர் செல்லாண்டியம்மன் கோவில் அருகே உள்ள ஏரிக்கு குளிக்கச் சென்றார்.அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது ஏரியின் ஆழமான பகுதிக்கு நிஷாந்த் சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி தத்தளித்தார். இதைக்கண்ட அவரது நண்பர்கள், நிஷாந்தின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குளத் திற்கு சென்று நிஷாந்தை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *