Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நூறுநாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறளாளிகளுக்கு பணி வழங்கக்கோரி மனு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நூறுநாள் வேலைத்திட்டத்தில் முறையாக பணி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூறுநாள் திட்டத்தில் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு மாதந்தோறும்‌ முறையாக பணி வழங்கப்படுவதில்லை எனவும் இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்து நடந்த போராட்டத்தின் முடிவில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானபிரகாசத்திடம் மனு கொடுத்தனர்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திய நிலையில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வட்டார வளர்ச்சி அலுவலர் வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *