துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது இந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமான ஒரு ஆண் பயணியின் உடைமைகளை சோதனை செய்த போது 24 கேரட் கொண்ட 6 தங்கக் கட்டிகளைக் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 700.400 கிராம் மற்றும் மதிப்பு ரூ.47.52 லட்சம். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments