Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சர்ச்சை பேச்சு – சாமியார் சிறையில் அடைப்பு

சென்னை புத்தகரத்தில் யோகக்குடில் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் சிவக்குமார். பல்வேறு மதங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பின்பற்றும் மெய்வழி மதத்தையும், குலதெய்வத்தையும் அவமதித்து, மதவுணர்வுகள் கடுமையாக புண்படும்படி தகாத வார்த்தை கூறி, 20க்கும் மேற்ப்பட்ட யூடியூப் வீடியோக்கள் வெளியிட்டுள்ளார்.

மேலும் அனைத்து மத கடவுள்களையும் அவமதித்தது, பெண்களை ஆபாசமாகப் பேசியும் வீடியோ வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த 26.7.2021ல் திருச்சி மாநகர போலீஸ் ஆணையர் அலுவலகத்திதில் புகார் செய்யப்பட்டது. அந்த புகார், உறையூர் காவல் நிலையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு 6.8.2021 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேற்படி வழக்கில், சிவக்குமாரை கைது செய்து இன்று திருச்சி குற்றவியல் நடுவர் எண் 4  முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றச் செயல்களுக்கான சட்டப் பிரிவுகளில் சிவக்குமாரை அக்டோபர் 13ம் வரை சிறையிலடைக்க நீதிபதி குமார் உத்தரவிட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *