திருச்சி மற்றும் மணப்பாறை ரோட்டரி கிளப் நடத்திய செல்லமே செல்லம் நிகழ்ச்சி

திருச்சி & மணப்பாறை ரோட்டரி கிளப்புகள் இணைந்து நடத்திய செல்லமே செல்லம் சிறப்பு குழந்தைகளுடன் "மகிழ்ச்சியின் நாள்" திருவிழா செவ்வாய், 1 ஜூலை இன்று காலை 9:30 மணி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது.
ஜே. கார்த்திக் மாவட்ட ஆளுநர், ஆர். சரண்யா கார்த்திக் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.திரு. ஆர். ரவிச்சந்திரன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வரவேற்புரை வழங்கினார்.திருச்சி ரோட்டரி ஊக்குவிப்பு செல்லமே
செல்லம் வண்ணங்கள் எம். ரமேஷ் MRA TN RIGHTS அவர்கள் சிறப்புரையாற்றும்பொழுது திறமையைக் கொண்டாடும்போது எங்களுடன் சேருங்கள், நினைவுகளை உருவாக்குங்கள். ஒவ்வொரு குழந்தையையும் அவர்கள் உண்மையிலேயே ஒரு நட்சத்திரமாக உணர வைப்போம் என்று கூறினார்.
இதில் எம்.சி. சந்தோஷ், எஸ். மணிகண்டசாமி, கே.எஸ். பாக்யராஜ், மாவட்ட கூட்டுப் பிரிவு சிறப்புத் ஜி. அசோக் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
What's Your Reaction?






