தேசிய கல்லூரி மாணவர்களுக்கு நூலக பயன்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Jul 10, 2025 - 19:10
Jul 11, 2025 - 17:04
 0  200
தேசிய கல்லூரி மாணவர்களுக்கு நூலக பயன்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசியக் கல்லூரியில் புதிதாக சேர்ந்த இளங்கலை மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை இன்று 10-07-2025. அன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தேசியக் கல்லூரியின் செயலாளர் திரு கா. ரகுநாதன் அவர்கள் RFID மற்றும் பார்கோடு (Bar-Code) பயன்பாட்டுடன் கூடிய கல்லூரியின் அடையாள அட்டையும் நூலகத்தின் நூல்கள் வழங்கும் அடையாள அட்டையும் வழங்கி சிறப்பித்தார். தேசியக் கல்லூரியின் முதல்வர் மேஜர் டாக்டர் டி. முத்துராமகிருஷ்ணன் தலைமை உரை நிகழ்த்தி சிறப்பித்தார்.

இக்கல்லூரியின் நூலகர் முனைவர் த.சுரேஷ்குமார் அவர்கள் தேசியக் கல்லூரியின் நூலக விதிமுறைகள் மற்றும் நூல்கள் மின்னணு புத்தகங்கள், மின்னணு நாளிதழ்கள் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகள் எவ்வாறு தங்கள் அலைபேசி மூலம் மாணவர்கள் தேசிய கல்லூரியில் நூலகத்தில் உள்ள அனைத்து கற்றல் வளங்களையும் பெற முடியும் என்பதை விரிவாக விளக்கினார்.

 வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தேசியக் கல்லூரி நூலகத்தில் உள்ள சேவைகள் அனைத்தும் நவீன கணினிமயமாக்கப்பட்டதையும் அதை எவ்வாறு பெற முடியும் என்பதையும் விரிவாக மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் சிறப்பாக வழங்கினார்.

இக்கல்லூரி நூலகத்தில் உள்ள கற்றல் வளங்கள் அனைத்தும் தங்கள் அலைபேசி மூலம் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் எவ்வாறு பெற முடியும் என்பதையும் விளக்கமாக நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது நிறைவாக நூலகத்திற்கு தேவையான அதிநவீன வசதிகளை நிறைவேற்றிக் கொடுத்த கல்லூரியின் செயலர் மற்றும் முதல்வர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் மாணவர்கள் தங்கள் முழு திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் இக்கல்லூரி நூலகத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தேசிய கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர் பரத் குமார் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.தேசிய கல்லூரியின் துணை நூலகர் ராதா ஜெயலக்ஷ்மி, நூலக தட்டச்சு பயிற்றுனர் அன்புமணி, கல்லூரி நூலக அலுவலர்கள் லட்சுமணன் கலியமூர்த்தி உமா மகேஸ்வரி மற்றும் குபேரன் ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள்

கல்லூரியின் ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0