மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூபாய் 5000 மானியம்- மாவட்ட ஆட்சியர்

Jul 1, 2025 - 15:43
Jul 1, 2025 - 15:50
 0  155
மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூபாய் 5000 மானியம்- மாவட்ட ஆட்சியர்

திருச்சிராப்பள்ளி மாவட்ட மீன்வளர்ப்பு விவசாயிகள் / மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு ஒரு ஹெக்டேர் பரப்பளவு மீன் பண்ணைக்கு 10000 எண்ணம் மீன்குஞ்சுகள் வீதம் ரூ.5000/- மானியம் என்ற அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு 20 ஹெக்டேருக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.5000/- வீதம் 10000 எண்ணம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் என்ற விகிதத்தில் மானியம் வழங்கப்படவுள்ளது.

2025-26 ஆம் ஆண்டிற்கு மீன்வளர்ப்பு உள்ளீட்டு மானியமாக வழங்கும் திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள விவசாயிகள் பயனடைய கீழ்க்காணும் முகவரியில் இயங்கி வரும் திருச்சிராப்பள்ளி மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை / மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கூடுதல் விவரம் பெற்று விண்ணப்பம் சமர்ப்பித்திட வேண்டும்.

உறுப்பினர் செயலர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை/உதவி இயக்குநர் அலுவலம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஒருங்கிணைந்த மீன்வள அலுவலக வளாகம் தரை தளம் கொட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டம் 620 023 தொலைபேசி எண். 0431 2421173

 இத்தகவலை திருச்சிராப்பள்ளி வே.சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0