திருச்சி அருகே கஞ்சா கொண்டு வந்த மூன்று வாலிபர் கைது

திருச்சி அருகே கஞ்சா கொண்டு வந்த மூன்று வாலிபர் கைது

திருச்சி திருவெறும்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கொண்டு வந்த மூன்று வாலிபர்களை துவாக்குடி போலீசார் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி போலீசார் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்த மூன்று பேரை மறித்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர்.

பின்னர் அவர்களிடம் உரிய முறையில் போலீசார் விசாரித்த பொழுது அவர்கள் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை சேர்ந்த ஆரோக்கிய நிக்கோலஸ் (24), அதே பகுதியை அஜித்குமார் (24), துவாக்குடி அண்ணா வளைவு பகுதியைச் சேர்ந்த  கருவா (எ) ராமச்சந்திரன் (24) என்பதும் தெரியவந்ததோடு அவர்கள் இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்ததோடு அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மூன்று பேரை திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn