திருச்சியில் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

திருச்சியில் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், நான்கு தொகுதிகள் உட்பட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள, புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில்.. இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வது, என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றிய, கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களுக்கு கூட்டம் நெஞ்சார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பணிகளை சிறப்பாக செய்ய, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட, ஸ்ரீரங்கம், முசிறி, மன்னச்சநல்லூர், துறையூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் பூத் கமிட்டி, மகளிர் குழு, பாசறை குழு அமைக்கும் பணிகளை விரைவாக மேற்கொண்டு, வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதிக்குள் அமைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி, முன்னாள் எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன், சிறுபான்மை நல பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision