காவல்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

காவல்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது.பேரணியை டிஎஸ்பி ராமநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். காமராஜர் சிலையில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக ரவுண்டானா பகுதியில் முடிவடைந்தது.பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு கலந்து கொண்டு கையெழுத்து இயக்க பதாகையில் கையெழுத்து இட்டனர்.

பேரணியில் தனியார் பாலிடெக்னிக் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.விழாவில் மணப்பாறை காவல் ஆய்வாளர் கோபி கணேசன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேசன், உதவி ஆய்வாளர் பிரதீப்,

ஜேசி நிர்வாகிகள் மணவை கிங்ஸ்,  தலைவர் ஜெயம்சக்திவேல், மண்டல இயக்குனர்கள் முல்லைசந்திரசேகர், பிரபு முன்னாள் தலைவர்கள் ராஜா, துளசிமணி, சாகுல்அமீத், செயலாளர் குணசேகரன், ஆட்சிமன்ற குழு அழகர், கண்ணன், நவீன், பிரகாஷ், பிரேம், தங்கபாண்டி, மணிகண்டன், இளையபெருமாள் மற்றும் காவலர்கள், போக்குவரத்து காவலர்கள் கலந்து  கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn