மாமேதை லெனின் நூற்றாண்டு விழா

மாமேதை லெனின் நூற்றாண்டு விழா

மக்கள் புரட்சியின் மூலம் மன்னராட்சியை வீழ்த்தி சோவியத் ரஷ்யாவை விடுதலை அடையச் செய்த மாமேதை லெனின் நூற்றாண்டு நினைவு தினம் ஜனவரி 21ல் உலகம் முழுவதும் நடைபெற்றது. திருச்சி மாநகரில்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் சிவா தலைமையில்நடைபெற்ற கருத்தரங்கில்தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ்மாமன்ற உறுப்பினர் சுரேஷ் பேராசிரியர் மணிமோகன் உள்ளிட்டோர் உரையாற்றினார். 

திருச்சி மாநகர் மேற்கு பகுதியில் 23 வது வார்டில் அலங்கரிக்கப்பட்ட மாமேதை லெனின் திரு உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பொருளாளர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார் மாநகர் மாவட்ட செயலாளர் சிவா பகுதிதுணைச் செயலாளர் முருகன்பகுதி குழு உறுப்பினர்கள்ஆனந்தன் ,மௌலானா, மாணிக்கம் ,சரண்சிங், ,நாகராஜன்,சீனிவாசன் மாதர் சம்மேளன செயலாளர் சுமதி, ராஜேஸ்வரி உள்ளிட்ட திரளான உறுப்பினர்கள் பங்கேற்றனர். திருவரங்கம் பகுதியில் பகுதி செயலாளர் பார்வதி தலைமையிலும் அபிஷேக புரத்தில் பகுதி செயலாளர்.

 

அஞ்சுகம் தலைமையிலும் மணிகண்டம் ஒன்றியத்தில் பகுதி செயலாளர் முருகன் தலைமையிலும் பொன்மலை பகுதி செயலாளர் ராஜா தலைமையிலும் மாமேதை லெனின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றது.#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision