மே தின பேரணி பொதுக்கூட்டம்

மே தின பேரணி பொதுக்கூட்டம்

தொழிலாளர்களின் உரிமை தினமான மே தினம் திருச்சியில் காந்தி மார்க்கெட் அருகில் இருந்து பேரணியாக ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான க. சுரேஷ் தலைமையில் தொடங்கி நடைபெற்றது.

பெரும்திரளான பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கோசமிட்டு வந்து தாராநல்லூர் கீரை கடை மைதானத்தில்மாவட்டத் தலைவர் நடராஜா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தேசிய செயலாளர் டி. எம். மூர்த்தி சிறப்புரையாற்றினார். தரைக்கடை சங்க செயலாளர் அன்சர்தீன், கட்டுமான சங்க செயலாளர் செல்வகுமார், போக்குவரத்து சம்மேளன செயலாளர் சுப்பிரமணி, பாரதமிகுமின் தொழிலக சங்கப் பொதுச் செயலாளர் பால முருகன்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் சிவா, புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் உரையாற்றினர். கிழக்குப் பகுதி செயலாளர் சையது அபுதாஹிர் நன்றி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....  https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn