சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா

சமயபுரம் மாரியம்மன்  கோயிலில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.மேலும் உலக நன்மைக்காகவும்,தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் நோய்,நொடியின்றி வாழவும்,குடும்பம் செழிக்கவும் மாசி மாதத்தில் நடைபெறும் பூச்சொரிதல் விழாக்காலங்களில் மரபு மாறி தன்னைத்தானே வறுத்திக்கொண்டு பக்தர்களுக்காக 28 நாட்கள் அம்மனே பச்சைப் பட்டினி விரதம் இருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பு.

 

இதனால் இக்கோவிலுக்கு தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் இந்த ஆண்டு தேர்த்திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 12 ந்தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.முன்னதாக தேரோடும் வீதியில் கிராம சாந்தி பூஜை நடைபெற்றது. பின்னர் கொடி மரத்திற்கு முன்பு பூஜைகள் நடைப்பெற்று ஊர்வலமாக எடுத்து வந்து ராஜகோபுரம் முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது. வருகின்ற 9 ந்தேதி கொடியேற்றத்துடன் சித்திரை தேர்த் திருவிழா தொடங்க உள்ளது.

அன்று காலை 6 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன்பு எழுந்தளி கொடியேற்ற நிகழ்வு நடைபெற உள்ளது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று காலை மூகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 18 ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 10.31 யிலிருந்து 11.30 மணிக்குள் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதை தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்ப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள், குருக்கள்கள் செய்து வருகிறார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGp

 

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn