வள்ளலார் முப்பெரும் விழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில் 4 நாட்கள் தொடர் அன்னதானம்

வள்ளலார் முப்பெரும் விழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில் 4 நாட்கள் தொடர் அன்னதானம்

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் சட்டமன்ற அறிவிப்பின்படி வள்ளலார் முப்பெரும் விழா தொடர்ச்சியாக ஜோதி வழிபாடு அகவல் பாராயணம் மற்றும் தொடர் அன்னதானம் 07.04.2023 முதல் 10.04.2023 வரை நான்கு நாட்கள் கொள்ளிடம் பஞ்சக்கரை சாலையில் உள்ள யாத்திரி நிவாஸில் நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று காலை 10.00 மணியளவில் கோயில் இணை ஆணையர்  செ.மாரிமுத்து முன்னிலையில் ஜோதி வழிபாடுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

 இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் திருமதி ஆண்டாள் இராம்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்,மதியம் 12.15 மணி அளவில் அன்னதானம் நடைபெறும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn