திருச்சியில் 300 கிலோ குட்கா பறிமுதல் நான்கு பேர் கைது

திருச்சியில் 300 கிலோ குட்கா பறிமுதல் நான்கு பேர் கைது

திருச்சி மாவட்டம் குமார வயலூர் பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு குட்கா பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்தப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார் ஒரு லாரியையும், பொலிரோ பிக்அப் வாகனத்தையும் சோதனை செய்தனர்.

அதில் 45 மூட்டைகளில் 300 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அந்த மூட்டைகள் அனைத்தையும் கண்ட்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் குட்கா மூட்டைகளை எடுத்து வந்த லாரியையும், பொலிரோ பிக் அப் வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக  லாரி ஓட்டுநர் அப்பானந்த மூர்த்தி, பொலிரோ ஓட்டுனர் பெரியசாமி, செல்லப்பாண்டி மற்றும் குடோன் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO