மாத்திரைகள் எரிப்பு - திருச்சி வாலிபர் உயிரிழப்பு

மாத்திரைகள் எரிப்பு - திருச்சி வாலிபர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரைச் சேர்ந்தவர் கலையரசன் (28). இவர் மரவனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு ஊழியராகவும், கே. பெரியபட்டி ஊராட்சியில் தற்காலிக அடிப்படையில் தூய்மை பணியாளராகவும் வேலை செய்து வந்தார்.

கடந்த 26 ம் தேதி அவரை மணப்பாறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு வரச் சொல்லி உள்ளனர். அதன்படி பணிக்கு வந்த கலையரசன் மருந்து மாத்திரைகளை எரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரின் சட்டையில் திடீரென தீப்பிடித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனடியான அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் தீக்காயம் அதிக அளவில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கலையரசன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி (30.6.2023) நேற்று உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், இன்று உறவினர்கள் மற்றும் தமிழ்நாடு டெங்கு கொசு ஒழிப்பு முன் களப்பணியாளர் சங்கத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இறப்பிற்கு உரிய நிவாரணம் வேண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து மாலையுடன் அமர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர் 

இந்தப் போராட்டத்தைப் பற்றி தகவல் அறிந்த திருச்சி வருவாய் கோட்டாட்சியாளர் தவச்செல்வன் மற்றும் காவல் உதவி ஆணையர் ராஜு பேச்சுவார்த்தை நடத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn