ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி திருவிழா - முக்கிய கோபுரம் வழியாக செல்ல அனுமதி மறுப்பு - காவல் ஆணையர் பேட்டி

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி திருவிழா - முக்கிய கோபுரம் வழியாக செல்ல அனுமதி மறுப்பு - காவல் ஆணையர் பேட்டி

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி திருவிழாவானது (13.12.2023) முதல் (22.12.2023) வரை பத்து திருவிழாவாகவும், (23.12.2023)ம் தேதி முதல் (02.01.2024)ம் தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது. (23.12.2023)ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படவுள்ளது.

திருச்சி மாநகரின் மிக முக்கியமான திருவிழாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிக்காக ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவில் ரெங்கவிலாஷ் மண்டபம் அருகில் மாநகர காவல்துறை சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று (11.12.2023) திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார்.

பின்னர் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் கூறுகையில்.... . போக்குவரத்து நெரிசலின்றி பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல போக்குவரத்து காவலர்கள் அதிக அளவில் பணி நியமிக்கப்பட்டு, போக்குவரத்தை சீராக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த வருடம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நான்கு சக்கர வாகனங்களை சித்திரை வீதி மற்றும் உத்திர வீதியில் நிறுத்த அனுமதியில்லை. கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது.

தற்சமயம் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கோவிலின் உட்புறத்தில் முக்கிய இடங்களில் 120 CCTV கேமராக்களும், கோவிலை சுற்றி வெளிபுறத்தில் 102 CCTV கேமராக்களும், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் 14 CCTV கேமராக்கள் என மொத்தம் 236 கேமராக்கள் பொருத்தப்பட்டு அதை புறக்காவல் நிலையத்திலிருந்தே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒலிபெருக்கி அமைக்கப்ட்டு பொதுமக்களுக்கு அவ்வப்போது அறிவிப்பு செய்து தகவல் தெரிவிக்க முன்னேற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோயிலின் உட்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள 120 CCTV கேமராக்களிலும் 70,000 குற்றாவாளிகளின் புகைப்படங்களை FRS (Face Recognizing Software) முகம் அடையாளம் காணும் மென்பொருள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. யாரேனும் குற்றவாளிகள் அங்கு நடமாடினால் மேற்கண்ட கேமராவானது குற்றவாளிகளின் முகங்களை ஸ்கேன் செய்து மென்பொருளில் பொருத்தப்பட்டுள்ள குற்றவாளிகளின் புகைப்படங்களுடன் ஒப்பீடு செய்து காவல் துறைக்கு எச்சரிக்கை ஒலியை ஏற்படுத்தும். மேலும் வரும் 13.12.2023-ந் தேதிலிருந்து 24 மணிநேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision