திருச்சியில் மாநில அளவிலான ரோலர் ஹாக்கி போட்டி - 15 மாவட்ட வீரர்கள் பங்கேற்பு

திருச்சியில் மாநில அளவிலான ரோலர் ஹாக்கி போட்டி - 15 மாவட்ட வீரர்கள் பங்கேற்பு

திருச்சி வடுகப்பட்டியில் 32 வது மாநில அளவிலான இன் லைன் மற்றும் ரோலர் ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

26ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் தமிழகம் முழுவதும் இருந்து 15 மாவட்டங்களை சேர்ந்த ஏழு வயதில் இருந்து 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை பங்கேற்கும் இன்லைன் மற்றும் ரோலர் ஆக்கி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

தற்பொழுது இன் லைன் ஹாக்கி போட்டியில் மதுரை மாவட்டம் புள்ளிகளில் முந்தியுள்ளது. மாவட்டங்கள் இடையே நடைபெறும் போட்டிகளில் எந்த மாவட்டத்தை சேர்ந்த அணிகள் மொத்தமாக புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளனவோ அவர்கள் சாம்பியன்ஷிப் கோப்பை வெல்வார்கள்.

மேலும் மிக முக்கியமாக வடுகப்பட்டி மைதானத்தில் தேசிய அளவிலான ரோலர் ஹாக்கி போட்டி வருகிற டிசம்பர் மாதம் சண்டிகிரில் நடைபெற உள்ளது. அதற்கான வீரர்களை தேர்வு செய்யும் பணியும் நடைபெறுகிறது. தமிழக அணிக்கு வீரர்கள் பங்கேற்க இத்தேர்வும் நேரடியாக நடைபெறுகிறது. ஏராளமான பெற்றோர்கள் பொதுமக்கள் இப்போட்டினை ஆரவாரத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

திருச்சியில் மூன்றாவது முறையாக மாநில அளவிலான இன்லைன் மற்றும் ரோலர் ஹாக்கி போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision