129 காலி பணியிடங்கள் - மாவட்ட ஆட்சியர் தகவல்

129 காலி பணியிடங்கள் - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அறிவது, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம், சென்னை அவர்கள் மூலம் 2023-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடத்திற்கான பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இப்பணியிடத்திற்கு முன்னாள் படைவீரர்களுக்கு 5% இட ஒதுக்கீட்டின்படி, 129 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது (01.07.2023) அன்று 47 வயதிற்கு மேற்படாதகராகவும், குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியுமுள்ள முன்னாள் படைவீரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையவழி வாயிலாக (17-09-2023)-க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறும், விண்ணப்பித்த நகலினை திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.