குதிரை பந்தய வீரரை கொலை செய்த 2 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

குதிரை பந்தய வீரரை கொலை செய்த 2 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் N.காமினி, திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் ரவுடிகள், சரித்திரபதிவேடு குற்றவாளிகள், கொலை, வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் செய்யும் குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

கடந்த 26.05.23-ந் தேதி உறையூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட டாக்கர் ரோட்டில் உள்ள மைசூர் காபி கடை அருகே குதிரை ரேக்ளாரேஸ் பந்தயத்தில் ஏற்பட்ட தோல்வியால் உண்டான முன் விரோதத்தின் காரணமாக குதிரை பந்தய வீரர் சண்முகம் 23/23 த.பெ.முருகன் என்பவரை ஆபாசமாக திட்டியும், அருவாள் மற்றும் கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு சிலர் தப்பி சென்றுவிட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தீவிர விசாரணையில், மேற்கண்ட கொலை வழக்கில் தொடர்புடைய திருச்சி மிளகுபாறை செல்வநகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (எ) கோபால் (30), த.பெ.கணேசன் மற்றும் தாராநல்லூர் அலங்கநாதபுரத்தை சேர்ந்த ஹரிபிரசாத் (எ) மாஸ் ஹரி (23), த.பெ.மோகன் ஆகியோர் உட்பட ஆறு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், எதிரிகளை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிரிகள் கோபாலகிருஷ்ணன் (எ) கோபால் மற்றும் ஹரிபிரசாத் (எ) மாஸ் ஹரி ஆகியோர்களின் கொலை குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு உறையூர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் N.காமினி, மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகளுக்கு அவர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய விஜி மற்றும் அபிஷேக் ஆகியோர்கள் மீது கடந்த (29.07.23) தேதி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

திருச்சி மாநகரில் இதுபோன்ற கொலை குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision