திருச்சியில் பாஜக நிர்வாகிகள் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு

திருச்சியில் பாஜக நிர்வாகிகள் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு

திருச்சி மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண்' 'என் மக்கள்' என்ற பெயரில் மூன்று நாட்கள் பாதயாத்திரை மேற்கொண்டார். இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து உரையாடினார். அப்போது அண்ணாமலைக்கு வரவேற்பு கொடுப்பதற்காக திருச்சி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வரவேற்பு பதாகைகள், பாஜக கொடிகள் வைக்கப்பட்டிருந்தன.

 இந்த நிலையில் 'என் மண்' 'என் மக்கள்' பாதயாத்திரை குறித்து அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைத்த பாஜக மாவட்ட செயலாளர் (வியாபார பிரிவு) சுரேந்தர் என்பவர் மாரிஸ் தியேட்டர் முதல் சிங்காரத்தோப்பு வரையிலும், பாஜக காந்தி மார்க்கெட் மண்டல் தலைவர் பழனி என்கின்ற மருந்து கடை.

 பழனி சிங்காரத்தோப்பு முதல் பெரிய கம்மாள தெரு வரையிலும் வரவேற்பு பதாகைகள் வைத்திருந்தனர். காவல்துறை அனுமதி பெறாமல் பதாகைகள் வைத்த இருவர் மீதும் கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

 https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision