திருச்சியில் கட்சி தலைவர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

திருச்சியில் கட்சி தலைவர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (46). இவர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி மாலதி ரவிச்சந்திரன் கடந்த சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டார்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் குடும்பத்தோடு ரவிச்சந்திரன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை சுமார் 3 மணி அளவில் மர்ம நபர்கள் இவரது வீட்டின் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இதில் இரண்டு குண்டு வெடித்து சிதறியது. ஒரு குண்டு வெடிக்காமல் கிடந்துள்ளது.

பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி திரியிட்டு கொளுத்தி வீசியுள்ளனர். இச்சம்பவம் காரணமாக வீட்டின் முன்பு சேதம் ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் விரைந்து வந்து தடயங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று இரவு கீழக்க்கல்கண்டர் கோட்டை பகுதியில் இரு கோஷ்டிகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ரவிச்சந்திரனுக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டுகளை மர்ம நபர்கள் வீசி சென்று இருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision