உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

 திருச்சிராப்பள்ளி குழுமணி சாலையில் உள்ள வின்ஸ் அன்பு அவென்யூவில்இன்று (5.6.22) உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு மியாவாக்கி குறுங்காடு உருவாக்கிடும் வகையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு,  வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் , மாநகராட்சி ஆணையர்  .ஆர். வைத்திநாதன், ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் நகரப் பொறியாளர்  அமுதவல்லி செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன், உதவி வனப்பாதுகாவலர் சம்பத், கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், மாமன்ற உறுப்பினர் பங்கஜம் மதிவாணன், கிராமாலபா நிறுவனர் பத்மஸ்ரீ எஸ்.தாமோதரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO