ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினர் போராட்டம்

ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினர் போராட்டம்

தூய்மை பணிகளை அவுட்சோசிங் விடும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் தேர்தல் காலத்தில் நிரந்தரப்படுத்துவதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யு தொழிற்சங்கத்தினர் திருச்சி ஒத்தக்கடை பகுதியில் இருந்து திருச்சி மாநகராட்சி அலுவலகம் வரை பேரணி.

நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறையினர் குவிப்பு. திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள முத்தரையர் சிலையிலிருந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட சிஐடியு தொழிற்சங்கத்தை சார்ந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மாநகராட்சி அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn