காலை உணவு திட்டம் - திருச்சியில் அமைச்சர் திடீர் ஆய்வு

காலை உணவு  திட்டம் - திருச்சியில் அமைச்சர் திடீர் ஆய்வு

திருச்சிக்கு வருகை தந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி மரக்கடை பகுதியில் அமைந்துள்ள சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தையும் பார்வையிட்டு உணவின் தரம் சரியாக இருக்கிறதா? மாணவர்களுக்கு சரியான அளவில் உணவு வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியுடன் அமர்ந்து காலை உணவை அருந்தினார் பின்னர் பள்ளியில் இருந்த கோப்புகளை ஆய்வு செய்து ஆசிரியர்களிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தார்.           

இந்த ஆய்வின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் உடனிருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn