ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது - ஆட்சியர் அறிவிப்பு

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது - ஆட்சியர் அறிவிப்பு

108 வைணத்திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா (04.12.21) அன்று பகல்பத்து பகல் பத்து முதல் நாள் திருநாள் தொடங்கியது.
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து ராப்பத்து என 20 நாட்கள் இப்பெருவிழா நடைபெறும்.

முக்கிய திருவிழாவான இராப்பத்து உற்சவத்தின் வைகுண்ட ஏகாதசி  வருகிற  (14.12.2021) அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.அதிகாலை 3.45 மணிக்கு ரத்ன அங்கி சேவையுடன் கிளிமாலை அணிந்து நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு கடந்து செல்வார். (24.12.2021) வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறுகிறது.

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு வருகிற 14-ஆம் தேதி 4:45 மணிக்கு நடைபெற உள்ளது. 3:45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுவார். வைகுண்ட ஏகாதசி அன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. 

முக்கிய திருவிழாவான ஏகாதசியன்று அதிகாலை பெருமாள் புறப்பாடின் போது  உள் பிரகாரங்களில் பக்தர்கள் வருவதற்கு அனுமதி இல்லை ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார். கோவிட் தொற்று பரவலை தடுக்கும் வழி முறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn