திருச்சி மலைக்கோட்டை கோயில் வாயிலில் நின்று பக்தர்கள் வழிபாடு

திருச்சி மலைக்கோட்டை கோயில் வாயிலில் நின்று பக்தர்கள் வழிபாடு

திருச்சியில் பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் வழிபடவும், சுற்றுலாவிற்கும் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கோயிலில் மக்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை.

எனினும் ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் என கோயிலுக்கு மக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். கீழே உள்ள மாணிக்க விநாயகரைத் தரிசிக்க மக்கள் வந்த நிலையில், கோயில் நிர்வாகத்தினரும், காவல்துறையினரும் முகப்பு பகுதியில் தடுப்புகளை அமைத்து, மக்களை உள்ளே அனுமதிக்காமல் வெளி பகுதியிலேயே திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்துள்ளதுடன், மக்கள் கொண்டுவரும் பூஜை பொருட்களை வைப்பதற்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn