திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

திருச்சி காந்தி சந்தையில் நாளை (03.08.2023) ஆடிப்பெருக்கு மற்றும் தொடர்ந்து வரும் ஆடி வெள்ளி உள்ளிட்ட சுப தினங்கள் காரணமாக திருச்சி காந்தி சந்தையில் பூக்களின் விலை கடந்த வார்த்தைக் காட்டிலும் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் வரை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

காந்தி சந்தையின் இன்றைய பூக்களின் விலை நிலவரம், கிலோ ஒன்றுக்கு செவ்வந்திப் பூ - ரூ.230 - 260, ரோஜா பூ - ரூ.200, பன்னீர் ரோஜா - ரூ.170 மல்லிகைப்பூ - ரூ.520, முல்லைப் பூ - ரூ.450 அரளிப்பூ - ரூ.240, சம்பங்கி - ரூ.250, விச்சிப்பூ - ரூ.200, கனகாம்பரம் - ரூ.500 மரிக்கொழுந்து - ரூ.50 (ஒரு கட்டு) என விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn