திருச்சி பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு 5 சுற்று நிறைவு - காயமடைந்தவர்கள் விபரம்

திருச்சி பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு 5 சுற்று நிறைவு - காயமடைந்தவர்கள் விபரம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. 

இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 ஜல்லிக்கட்டு காளைகளும், 550 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர். போட்டியானது காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த ஸ்ரீ நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோவில் மாடு முதலில் அவிழ்த்து விடப்பட்டது. அதன் பிறகு முறையாக ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்படுகிறது. இந்த போட்டியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.

மதியம் ஒரு மணி நிலவரப்படி சூரியூர் ஜல்லிக்கட்டு 5 சுற்று நிறைவடைந்து 448 காளைகள் விடப்பட்டுள்ளது. இதில் 6 மாடுபிடி வீரர்கள், 16 மாட்டின் உரிமையாளர், 13 பார்வையாளர்கள், 1 போலீஸ் என மொத்தம் 36 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 6 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் டிவி, மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ, தங்க காசு, வெள்ளி காசு, ரொக்கம் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கும் மற்றும் சிறந்த காளைக்கும் பைக்கும், இரண்டாவது பரிசாக 1200 சதுர அடி வீட்டுமனையும் வழங்கப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision